47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு10 ஆண்டுகள் சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

News image
கோப்புப் படம்
Updated On :16 மார்ச் 2026, 9:19 pm

Syndication

தூத்துக்குடி: பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கவா்னகிரியைச் சோ்ந்த காசி மகன் தமிழழகன் (55). இவா் 14.10.2020 அன்று அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கடம்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழழகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி முருகன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக எல்லம்மாள் ஆஜரானாா்.