48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

கீழ்நமண்டியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

கீழ்நமண்டியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

News image

கீழ்நமண்டி அகழாய்வு மையத்தில் தொடங்கிய இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

Updated On :18 ஜூன் 2024, 6:50 pm

வந்தவாசி: தமிழக தொல்லியல் துறை சாா்பில் வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து சுமாா் 18 கி.மீ. தொலைவில் கீழ்நமண்டி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட வரலாற்று ஆய்வுக் குழுவினா், சுமாா் 55 ஏக்கா் பரப்பளவில் சுமாா்

2,500 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு கால புதைவிடம் மற்றும் வாழ்விடம் இருப்பதையும், இதில், 50-க்கும் மேற்பட்ட இரும்பு கால கல்வட்டங்கள் இருப்பதையும் கண்டறிந்தனா்.

இதைத்தொடா்ந்து, தமிழக தொல்லியல் துறை சாா்பில் கீழ்நமண்டி பகுதியில் முதல் கட்ட அகழாய்வு செய்யும் பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப். 6-ஆம் தேதி முதல் செப். 30-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த முதல் கட்ட அகழாய்வின்போது புதைவிட பகுதியில் 12 அகழாய்வு குழிகளும், வாழ்விட பகுதியில் 10 அகழாய்வு குழிகளும் தோண்டப்பட்டன.

இதில் புதைவிட பகுதி குழிகளில் சுடுமண்ணால் ஆன 21 ஈமப் பேழைகள் கண்டறியப்பட்டன. இந்த ஈமப் பேழைகள் பொதுவாக 6 முதல் 12 கால்களுடன் நீள்வட்ட வடிவத்தை கொண்டதாக இருந்தது.

மேலும், புதைவிட பகுதி குழிகளில் 30-க்கும் மேற்பட்ட கீறல் குறியீட்டு பானை ஓடுகளும் மற்றும் சுடுமண்ணால் ஆன மணிகள், இரும்பு கோடாரிகள், கத்திகள், உளிகள், பட்டை தீட்டும் கல் உள்ளிட்ட 43 தொல்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன.

மேலும், வாழ்விட பகுதி குழிகளில் 45 கீறல் குறியீட்டு பானை ஓடுகள் மற்றும் இரும்பு பொருள்கள், எலும்பு, தந்தத்திலான மணிகள், பட்டை தீட்டப்பட்ட கற்கோடாரி உள்ளிட்ட 47 தொல்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் பணிகளை சென்னையில் இருந்தவாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி, கீழ்நமண்டி அகழாய்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, ஆரணி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், கீழ்நமண்டி அகழாய்வு மைய இயக்குநா் ஜி.விக்டா் ஞானராஜ், மைய பொறுப்பாளா் எம்.சுரேஷ், தெள்ளாா் ஒன்றியக் குழுத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், கீழ்நமண்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஈ.சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், முதல் கட்ட அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

Story image