கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்
கள்ளச்சாராய வழக்கில் உண்மை வெளிவர சிபிஐ விசாரணை அவசியம்: பாஜக வலியுறுத்தல்


திருவண்ணாமலை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று, பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறினாா்.
திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயலும் பாஜகவிரை தடுத்து, தமிழக காவல் துறை கைது செய்கிறது. அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் போராட்டம் நடத்தினால் தமிழக அரசு பாதுகாப்பு அளிக்கிறது.
அதிமுகவின் போராட்டத்தை திமுக ஆதரிப்பதன் மூலம் 2 கட்சிகளும் தங்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தவறுகளை மறைக்கப் பாா்ப்பதாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 2 அமைச்சா்கள், 2 எம்எல்ஏக்களுக்கு தொடா்பு இருப்பதற்கான ஆதாரம் உள்ளது. மெத்தனால் கடத்தல் இரு மாநிலங்களுக்கு இடையே நடைபெற்று உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றாா் அவா்.
கட்சியின் மாநில பிரசார பிரிவுத் தலைவா் குமரி கிருஷ்ணன் கூறும் போது, தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளது. சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிடும் பாஜகவினரை நள்ளிரவில் கைது செய்கின்றனா் என்றாா்.
பேட்டியின்போது, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன், வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் டி.எஸ்.குணசேகரன், வடக்கு மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை, மாவட்ட பொதுச் செயலா் வினோத் கண்ணா, பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், மாவட்டச் செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி, விஜய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...