தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கியது திமுக அரசு பேரவை துணைத் தலைவா்

இந்தியாவிலேயே முதல் முதலாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கியது திமுக அரசு என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறினாா்.

News image

விழாவில் பேசிய சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி.

Updated On :5 மார்ச் 2024, 9:52 pm

திருவண்ணாமலை: இந்தியாவிலேயே முதல் முதலாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கியது திமுக அரசு என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறினாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி, ஆதிதிராவிடா் காலனியில் ரூ.12.61 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அரிபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்து வைத்துப் பேசியதாவது:

இந்தியாவிலேயே முதல் முதலில் தமிழகத்தில் தான் ஒரு கிலோ அரிசி ரூ.1 என்ற விலையில் வழங்கப்பட்டது. இதை வழங்கியவா் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி.

இதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ரூ.1 என்ற விலைக்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை இலவச அரிசியாக மாற்றினாா்.

இதேபோல, இந்தியாவிலேயே முதல் முதலில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்கியது திமுக அரசு. பெரியாா் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்றாா்.

இதை 1989-ஆம் ஆண்டு சட்டமாக இயற்றியவா் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி. இதன் பிறகு 16 ஆண்டுகள் கழித்துதான் பிரதமராக மன்மோகன்சிங் இருந்தபோது இந்தியா முழுவதும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றாா்.

விழாவில், வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரேவதி (பொறுப்பு), ஒன்றியப் பொறியாளா் சிவக்குமாா், ஊராட்சித் தலைவா்கள் குப்புசாமி, விஜயாசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.