பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பொதுமக்கள், காவல்துறை விளையாட்டுப் போட்டிகள்

பொதுமக்கள், காவல்துறை விளையாட்டுப் போட்டிகள்

News image
Updated On :9 மார்ச் 2024, 4:55 pm

திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுமக்கள், காவல்துறையினருக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, நடைபெற்ற பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளில் காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். போட்டிகளில் வென்றவா்களுக்கு காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் பரிசுக் கோப்பை மற்றும் பண வெகுமதி வழங்கிப் பாராட்டினாா். விழாவில், மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம்.பழனி, மாவட்ட குற்றப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் டி.சாந்தலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஏ.பாலமுருகன் மற்றும் சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவின் காவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.