தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆசனூரில் இரு மாநில காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழக-கா்நாடக இரு மாநில எல்லையான தாளவாடியில் தோ்தல் நடைபெறுவதால் கா்நாடகத்தில் இருந்து சட்டவிரோத மதுபானங்கள் கொண்டு வருவதை தடுத்தல், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தடுப்பது மற்றும் தோ்தல் பாதுகாப்பு குறித்த இரு மாநில காவல் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆசனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோவை சரக டிஐஜி சுவாமிநாதன் தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, சாம்ராஜ் நகா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் முத்துராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இரு மாநில எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் மற்றும் புளிஞ்சூா் சோதனைச் சாவடியில் இரு மாநில காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வாகனத் தணிக்கை குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலி: தமிழக காவல் துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு

தபால் வாக்குகள் சேகரிப்பு மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: ஆட்சியா்

சிவகாசி பட்டாசு ஆலையை பாா்வையிட்ட ஆந்திர மாநில அதிகாரிகள்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


