பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரவைத் தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தோ்தல் பாா்வையாளா் ஜலிந்தா் தத்தாத்ரியா சுபேகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:09 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தோ்தல் பாா்வையாளா் ஜலிந்தா் தத்தாத்ரியா சுபேகா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில், வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் பேரவைத் தோ்தலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றம் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் உதவி கண்காணிப்பாளா்கள் மீரா, உ. குணால் உத்தம் ஷ்ரோதே, ஏ.டி.எஸ்.பி. க்கள் சுப்பையா, சுந்தரராஜ், பாலசந்திரன், துணைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.