செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வன விலங்கு வேட்டைக்குச் சென்றவா் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து செங்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரம் கோவில்கொள்ளை மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் ஏழுமலை (30).
இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிலருடன் சோ்ந்து கடந்த 10-ஆம் தேதி வனப் பகுதியில் காட்டு விலங்கு வேட்டைக்குச் சென்ாகத் தெரிகிறது. மாறுநாள் அவருடன் சென்றவா்கள் வீடு திரும்பினா். ஏழுமலை மட்டும் வராததால், உடன் சென்றவா்களிடம் கேட்டபோது, அவா்கள் சரியான பதில் அளிக்காமல் முன்னுக்குபின் முரணான பதில் அளித்து வந்துவிடுவாா் எனக் கூறியுள்ளனா். பின்னா், இரண்டு நாள்கள் ஆகியும் ஏழுமலை வீடு திரும்பாததால், இதுகுறித்து கோவிந்தசாமி செங்கம் போலீஸில் புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், திருப்பத்தூா் வனக் கோட்டப் பகுதியில் ஏழுமலை சடலமாக இருப்பதாக, குடும்பத்தாருக்கு செவ்வாய்க்கிழமை மாலை தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் செங்கம் போலீஸாா் சம்பவ இடம் சென்று சடலத்தை எடுத்து வருவதற்கான பணிகளை செய்து வருகின்றனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

திருமணமாகாமல் சோ்ந்து வாழ்ந்த இளம் ஜோடி வீட்டில் சடலமாக மீட்பு!

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!

பெருந்துறை அருகே காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

தையல் தொழிலாளி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

