மத்திய தில்லியில் உள்ள தனது வீட்டில் பூட்டப்பட்ட அறைக்குள் கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் புதிதாக திருமணமான 19 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டாா் என்று காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ஆனந்த் பா்பத் பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அப்போது, கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் பெண் சடலமாக மீட்கப்பட்டாா்.
அவரது கணவா் தப்பி ஓடி தலைமறைவாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரைக் கைது செய்ய சிசிடிவி காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினா் மற்றும் அக்கம் பக்கத்தாரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை
வெளிப்புற தில்லியில் பெண் சடலம் மீட்பு: மூவா் கைது

ஆசாத்பூரில் டிடிசி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


