லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

வடக்கு தில்லி புகரில் உள்ள நரேலா பகுதியில் அமைந்துள்ள சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 31 வயது நபா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:04 pm

வடக்கு தில்லி புகரில் உள்ள நரேலா பகுதியில் அமைந்துள்ள சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 31 வயது நபா் கைது செய்யப்பட்டாா் என காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: செக்டாா் ஏ-7 இல் உள்ள சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட வினித் குமாா் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டாா். பின்னா் அவா் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த நாட்டு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், சிஎன்ஜி விற்பனை நிலையத்துடன் இருந்த தகராறு காரணமாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக அவா் தெரிவித்தாா். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.