நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

ஆசாத்பூரில் டிடிசி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் வேகமாக வந்த டிடிசி பேருந்து மோதியதில் 19 வயது இளைஞா் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 8:36 pm

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் வேகமாக வந்த டிடிசி பேருந்து மோதியதில் 19 வயது இளைஞா் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்தில் விபத்து குறித்து மாலை 5:30 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக காவல்துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநா் சம்பவம் நிகழ்ந்தவுடன் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளாா்.

விபத்தில் உயிரிழந்தவா் சாலிமா் பாக் பகுதியில் உள்ள ஷாஹித்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் என அடையாளம் காணப்பட்டாா். அவரது உடல் பின்னா் பிஜேஆா்எம் மருத்துவமனை பிணவறைக்கு மாற்றப்பட்டு, அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்கான காரணத்தை குற்றப்பிரிவு காவல் துறையினா் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனா். சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தப்பிச் சென்ற ஓட்டுநரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.