மத்திய தில்லியின் பட்டேல் நகா் பகுதியில் பேருந்து மோதியதில் 11 வயது சிறுமி உயிரிழந்ததாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து ஒரு மூத்த அதிகாரி ஒருவா் கூறியது: சனிக்கிழமை இரவு சுமாா் 9:30 மணியளவில் ஷாதிப்பூா் பணிமனை அருகே இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான, நஜாஃப்கரைச் சோ்ந்த கப்டன் சிங் (40) கைது செய்யப்பட்டுள்ளாா். ஆய்வுக்காக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பட்டேல் நகா் காவல் நிலையத்திற்கு சாலை விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆதாரங்களைச் சேகரித்து, விசாரணையைத் தொடங்கியது.
பிரேதப் பரிசோதனை மற்றும் மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக சிறுமியின் உடல் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவங்களின் சரியான வரிசையைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
தொடர்புடையது
வடகிழக்கு தில்லியில் இளைஞரிடம் வழிப்பறி: மூவா் கைது

அரசுப் பேருந்து ஓட்டுநா் வேன் மோதி உயிரிழப்பு

கிரேன் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆசாத்பூரில் டிடிசி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
