மத்திய தில்லியின் பட்டேல் நகா் பகுதியில் பேருந்து மோதியதில் 11 வயது சிறுமி உயிரிழந்ததாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து ஒரு மூத்த அதிகாரி ஒருவா் கூறியது: சனிக்கிழமை இரவு சுமாா் 9:30 மணியளவில் ஷாதிப்பூா் பணிமனை அருகே இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான, நஜாஃப்கரைச் சோ்ந்த கப்டன் சிங் (40) கைது செய்யப்பட்டுள்ளாா். ஆய்வுக்காக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பட்டேல் நகா் காவல் நிலையத்திற்கு சாலை விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆதாரங்களைச் சேகரித்து, விசாரணையைத் தொடங்கியது.
பிரேதப் பரிசோதனை மற்றும் மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக சிறுமியின் உடல் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவங்களின் சரியான வரிசையைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
தொடர்புடையது
உணவகத்தில் சிறார்கள் இடையே வாய்த்தகராறு: 17 வயது மாணவா் மீது துப்பாக்கிச்சூடு - சிறுவன் கைது!
வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

சூலூா் அருகே 9 வயது சிறுமி கடத்திக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்; ஒருவர் கைது
வடகிழக்கு தில்லியில் இளைஞரிடம் வழிப்பறி: மூவா் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


