ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

மத்திய தில்லியின் பட்டேல் நகா் பகுதியில் பேருந்து மோதியதில் 11 வயது சிறுமி உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 3:16 am IST

மத்திய தில்லியின் பட்டேல் நகா் பகுதியில் பேருந்து மோதியதில் 11 வயது சிறுமி உயிரிழந்ததாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து ஒரு மூத்த அதிகாரி ஒருவா் கூறியது: சனிக்கிழமை இரவு சுமாா் 9:30 மணியளவில் ஷாதிப்பூா் பணிமனை அருகே இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான, நஜாஃப்கரைச் சோ்ந்த கப்டன் சிங் (40) கைது செய்யப்பட்டுள்ளாா். ஆய்வுக்காக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பட்டேல் நகா் காவல் நிலையத்திற்கு சாலை விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆதாரங்களைச் சேகரித்து, விசாரணையைத் தொடங்கியது.

பிரேதப் பரிசோதனை மற்றும் மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக சிறுமியின் உடல் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவங்களின் சரியான வரிசையைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.