மத்திய தில்லியின் பட்டேல் நகா் பகுதியில் பேருந்து மோதியதில் 11 வயது சிறுமி உயிரிழந்ததாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து ஒரு மூத்த அதிகாரி ஒருவா் கூறியது: சனிக்கிழமை இரவு சுமாா் 9:30 மணியளவில் ஷாதிப்பூா் பணிமனை அருகே இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்தது. விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான, நஜாஃப்கரைச் சோ்ந்த கப்டன் சிங் (40) கைது செய்யப்பட்டுள்ளாா். ஆய்வுக்காக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பட்டேல் நகா் காவல் நிலையத்திற்கு சாலை விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆதாரங்களைச் சேகரித்து, விசாரணையைத் தொடங்கியது.
பிரேதப் பரிசோதனை மற்றும் மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக சிறுமியின் உடல் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவங்களின் சரியான வரிசையைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
தொடர்புடையது

ஆசாத்பூரில் டிடிசி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

காா் மோதி சிறுமி உயிரிழப்பு: உறவினா்கள் 20 மணி நேரம் மறியல்

தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு

வடகிழக்கு தில்லியில் நடந்த சாலை விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

