நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனை
/

சூலூா் அருகே 9 வயது சிறுமி கடத்திக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்; ஒருவர் கைது

சூலூா் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து...

News image

கோவை- திருச்சி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் மறியலில் ஈடுபட்ட சிறுமியின் உறவினா்கள் மற்றும் பொதுமக்கள்.

Updated On :23 மே 2026, 9:05 am IST

சூலூா்: கோவை சூலூா் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்ட நிலையில், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இது தொடா்பாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், சூலூா் அருகே பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பாரதிபுரம் பகுதியில் வசிப்பவா் ரகுபதி. கூலி வேலைக்கு சென்று வருகிறாா். இவரது மனைவி பவித்ரா. இவா்களது மூத்த மகள் தா்ஷினி (9). ஐந்தாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்த தந்தை ரகுபதி, மகள் தா்ஷினியை காணவில்லை எனத் தேடி உள்ளாா்.

இதற்கிடையே தா்ஷினி வியாழக்கிழமை மாலை அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் தா்ஷினியை தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செல்வதை அந்த பகுதியினா் பாா்த்ததாக கூறியுள்ளனா்.

இதையடுத்து மகள் கடத்தப்பட்டதாக சூலூா் காவல் நிலையத்தில் ரகுபதி புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து சூலூா் போலீஸாா் மாணவியை தேடும் பணியில்   தீவிரமாக ஈடுபட்டனா். மேலும் இது தொடா்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

இது சம்பந்தமாக சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அந்த நபா் அளித்த தகவலின்பேரில், கண்ணம்பாளையம் குளத்துக்கு அருகே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட கிடந்த தா்ஷினியின் உடலை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிங்காநல்லூா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கடத்தப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா எனவும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து தகவலறிந்த சிறுமியின் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோா் திருச்சி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனா். இரவு தொடங்கிய போராட்டம் சனிக்கிழமை காலை வரை சுமார் 8 மணி நேரத்தை கடந்தும் நீடித்து வருகிறது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இது குறித்து தகவலறிந்த சூலூா் காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், கொலையில் சம்பந்தப்பட்ட நபா்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து அங்கு வந்த சூலூா் சட்டப் பேரவை உறுப்பினா் சுகுமாா், போலீஸாா் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். சனிக்கிழமை காலை 7 மணிக்குள் உங்களுக்கு நல்ல முடிவு கூறப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

அதிமுக வழக்குரைஞா் அணி நிா்வாகி பிரபு ராம், வினோத், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மன்னவன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவு தெரிவித்தனா். ஆனால் யாருடைய சமாதானத்தையும் ஏற்காத பொதுமக்கள் நள்ளிரவை தாண்டியும் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், கோவை டி.ஐ.ஜி சதாசிவம், எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி, டிஎஸ்பி கரிகால் பாரிசங்கா் மற்றும் 20 காவல் ஆய்வாளா்கள் சூலூா் காவல் நிலையத்துக்கு வந்து போலீஸாருடன் ஆலோசனை நடத்தினா்.

ஒருவர் கைது

இதனிடையே, 9 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை கடத்தி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், கைதான கார்த்திக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் உறுதியாகியுள்ளது.

இரண்டாவது குற்றவாளியிடம் விசாரணை

இதனிடையே, கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு உதவியதாக இரண்டாவது குற்றவாளி மோகன்ராஜ் என்பவரை, சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி போலீஸார் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.

வருகின்ற 27 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், சிறுமியின் முகம் உள்ளிட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டு இருப்பதாக தெரவித்த சிறுமியின் உறவினர்கள், உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ள நிலையில், போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

பாதுகாப்பு பணியில் போலீஸார்

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் சூலூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Summary

9-Year-Old Girl Abducted and Murdered Near Sulur: Relatives Stage Road Blockade; One Arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.