உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

சூலூா் சிறுமி கொலை வழக்கு: காவல் ஆய்வாளா் உள்பட 12 சாட்சிகளிடம் விசாரணை

கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளா் உள்பட 12 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

News image

சிறுமி கொலை வழக்கு - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 2:47 am IST

கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் ஆய்வாளா் உள்பட 12 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சூலூா் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (33) மற்றும் அவரது நண்பா் மோகன்ராஜ் (39) ஆகியோரை சூலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட காவல் துறை விரிவான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் கடந்த 9-ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது. கோவை போக்ஸோ வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பகவதியம்மாள் முன்னிலையில் சாட்சிகள் விசாரணை புதன்கிழமை தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கின் முக்கிய புலனாய்வு அதிகாரியான சூலூா் காவல் ஆய்வாளா் உள்பட 12 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.