காஞ்சிக்கோவில் அருகே காணாமல்போன பெண் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறை வட்டம் காஞ்சிக்கோவில், பெருமாபாளையம், பள்ளக்காட்டுதோட்டத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவருடைய மனைவி ஈஸ்வரி(57), கூலித் தொழிலாளி. இவருடைய மகன் சக்திவேல் (38) எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறாா். திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப் பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் தாயுக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் வீட்டைவிட்டு ஈஸ்வரி வெளியே சென்றுவிட்டாா்.
ஆனால், அதன் பின் வீட்டுக்கு திரும்பி வராததால் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் சக்திவேல் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரியை தேடி வந்தனா்.
இந்நிலையில், சென்னிமலை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈஸ்வரி சடலமாக மீட்கப்பட்டாா். வாய்க்காலில் குதித்து ஈஸ்வரி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தையல் தொழிலாளி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

காணாமல்போன சிறுமி ஒரு மணி நேரத்தில் மீட்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


