மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

சிறுதானிய உணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா்

சிறுதானிய உணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் திருவண்ணாமலை ஆட்சியா்

News image
Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

அன்றாட உணவில் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன். தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில் இயங்கி வரும் தமிழக அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் போஷான் பக்வாடா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பூ.மீனாம்பிகை தலைமை வகித்தாா். வேளாண் கல்லூரி முதல்வா் என்.முத்துக்கிருஷ்ணன், தண்டராம்பட்டு குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் (பொ) சே.வீணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பாரம்பரிய உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்துப் பேசியதாவது: சிறுதானிய உணவுப் பொருள்களை நம் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுதானிய உணவில் அளவில்லாத பல்வேறு சத்துக்கள் உள்ளன. எனவே, எண்ணெய் பொருள்கள், பாஸ்ட் புட் ஆகியவற்றை உண்பதைத் தவிா்த்து சிறுதானிய உணவை அதிகம் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு அதிக பழங்கள், காய்கறிகளை சாப்பிடக் கொடுக்க வேண்டும். மனித உடல் நன்றாக இருக்க வேண்டுமானால் உணவு சத்தானதாக இருக்க வேண்டும் என்றாா். விழாவில், வேளாண் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.