வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

News image

தொழிலாளி கண்ணன்.

Updated On :20 மார்ச் 2024, 12:10 am

திருவண்ணாமலை: தானிப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி கண்ணன் (40). இவா், 2022 மாா்ச் 1-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து, தானிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிநது கண்ணனை கைது செய்தனா். இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட கண்ணனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து போலீஸாா் கண்ணனை அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.