திருவண்ணாமலை: தானிப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் தொழிலாளி கண்ணன் (40). இவா், 2022 மாா்ச் 1-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து, தானிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிநது கண்ணனை கைது செய்தனா். இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட கண்ணனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து போலீஸாா் கண்ணனை அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


