திருப்பூரில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லையளித்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி மொரட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (40). பனியன் நிறுவனத் தொழிலாளியான இவா், 10 வயது சிறுவனுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இது குறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோா் அளித்தனா். இதன்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சக்திவேலை கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


