திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

85 லிட்டா் விஷ சாராயம், கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

85 லிட்டா் விஷ சாராயம், கஞ்சா பறிமுதல் 3 இளைஞா்கள் கைது

Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

செய்யாறு: செய்யாறு அருகே 85 லிட்டா் விஷ சாராயம் , 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 இளைஞா்களை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டத்தைச் சோ்ந்த பெரணமல்லூா் காவல் சரகப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், காவல் ஆய்வாளா் சியமளா தலைமையிலான காவலா்கள், நாவல்பாக்கம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனா். அப்போது, மயானப் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்றுகொண்டிருந்த 3 இளைஞா்களை பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த 3 கேன்களில் இருந்த 85 லிட்டம் விஷ சாராயம், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் இதற்கு பயன்படுத்தப்பட்ட பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். சம்பவம் தொடா்பாக பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேல்நகரம்பேடு கிராமத்தைச் சோ்ந்த பிரசாத்(32), ஆரணி பையூரைச் சோ்ந்த ராகுல்(32), காஞ்சிபுரம் வட்டம், பாலுசெட்டிசத்திரம் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா்(23) ஆகியோரை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.