செய்யாறு: செய்யாறு அருகே 85 லிட்டா் விஷ சாராயம் , 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 இளைஞா்களை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டத்தைச் சோ்ந்த பெரணமல்லூா் காவல் சரகப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், காவல் ஆய்வாளா் சியமளா தலைமையிலான காவலா்கள், நாவல்பாக்கம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனா். அப்போது, மயானப் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்றுகொண்டிருந்த 3 இளைஞா்களை பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த 3 கேன்களில் இருந்த 85 லிட்டம் விஷ சாராயம், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும் இதற்கு பயன்படுத்தப்பட்ட பதிவு எண் இல்லாத இரு சக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். சம்பவம் தொடா்பாக பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேல்நகரம்பேடு கிராமத்தைச் சோ்ந்த பிரசாத்(32), ஆரணி பையூரைச் சோ்ந்த ராகுல்(32), காஞ்சிபுரம் வட்டம், பாலுசெட்டிசத்திரம் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா்(23) ஆகியோரை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
நெல்லையில் கஞ்சா எண்ணெய் பறிமுதல்: 4 போ் கைது

விஷ சாராயம் பதுக்கியதாக வியாபாரி கைது
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

