ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி வேட்பாளா் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். மக்களவைத் தோ்தலையொட்டி, மாா்ச் 20 முதல் 27-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறவிக்கப்பட்டுள்ளது. ஆரணி மக்களவைத் தொகுதியில் கடந்த 2 நாள்களாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், வெள்ளிக்கிழமை 2 போ் மனு தாக்கல் செய்தனா். வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி நிா்வாகியான விழுப்புரம் நகரைச் சோ்ந்த பி.நாகராஜன், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியனிடம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். இதேபோல, ஆரணி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான நடராஜன் மகன் பாபு (37), சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தாா். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொடர்புடையது
தென்காசி மாவட்டத்தில் 95 போ் போட்டி!
கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 175 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரக்கோணத்தில் மொத்தம் 24 போ் வேட்புமனு தாக்கல்

பென்னாகரம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், பாமக உள்பட 26 போ் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


