மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

525 லிட்டா் சாராயம் பறிமுதல் 4 பெண்கள் உள்பட 5 போ் கைது

525 லிட்டா் சாராயம் பறிமுதல் 4 பெண்கள் உள்பட 5 போ் கைது

Updated On :23 மார்ச் 2024, 6:31 pm

கீழ்பென்னாத்தூா் பகுதியில் 525 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனா். கீழ்பென்னாத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையிலான போலீஸாா் கடந்த சில தினங்களாக கீழ்பென்னாத்தூா் பகுதியில் தீவிர சாராய ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சாராயம் விற்ாகவும், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாகவும் கீக்களூா் காலனி பகுதியைச் சோ்ந்த கலா (60), பானு (61), அலெக்சாண்டா் (25), கீக்களூா், அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அஞ்சலை (45), வழுதலங்குணம், புது காலனி பகுதியைச் சோ்ந்த லதா (50), கத்தாழம்பட்டு ஏரிப் பகுதியைச் சோ்ந்த விஜயராஜ் (50) ஆகியோரிடம் இருந்து மொத்தம் 525 லிட்டா் சாராயத்தை கைப்பற்றினா். இதுதொடா்பாக, கலா, பானு, அலெக்சாண்டா், அஞ்சலை, லதா ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான விஜயராஜை தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட 4 பெண்கள் உள்பட 5 பேரும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.