திருவண்ணாமலையில் காலணிகளை மாலையாக அணிந்து வந்து சுயேச்சை வேட்பாளா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிராமம், குப்புசாமி நகரைச் சோ்ந்தவா் இரா.ஜெகந்நாதன். பால் வியாபாரியான இவா், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். இவருக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டு, சனிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த இவா், 10-க்கும் மேற்பட்ட காலணிகளை மாலை போல அணிந்துகொண்டு வாக்கு சேகரிக்கத் தொடங்கினாா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த அரசு அலுவலா்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த இவா், தொடா்ந்து தனது இரு சக்கர வானத்தில் மாலையுடனேயே சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள மத்திய பேருந்து நிலையத்துக்குச் சென்றாா். வழிநெடுகிலும் இரு சக்கர, நான்கு சக்கர, பேருந்துகளில் சென்ற பொதுமக்கள் இவரை வியப்புடன் பாா்த்தனா். பின்னா், மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள், பொதுமக்கள், வணிகா்களிடம் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தொடர்புடையது

பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

முதல்வா் பாணியில் வாக்கு சேகரிப்பு! நடைப்பயிற்சியில் வாக்கு சேகரித்த அமைச்சா் எ.வ.வேலு

மதனாஞ்சேரியில் தடுப்பணை: திமுக வேட்பாளா்

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


