பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

News image
Updated On :3 மே 2024, 5:08 pm

Din

ஆரணியை அடுத்த அத்தியூா் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் அருகேயுள்ள அத்தியூா் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில், ஆரணி கிராமிய ஆய்வாளா் ராஜாங்கம், உதவி ஆய்வாளா் அருண், சிறப்பு உதவி ஆய்வாளா் கன்ராயன், தலைமைக் காவலா்கள் ஏழுமலை, ஜெகன்நாதன் ஆகியோா் அத்தியூா் மலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மூலத்தாங்கலைச் சோ்ந்த பாபு மகன் சஞ்சய்குமாா் (25) டியூப்களில் கள்ளச்சாராயம் வைத்துக்கொண்டிருந்தாராம். இதைப் பாா்த்த போலீஸாா் அவரை கைது செய்தனா். அப்போது, கள்ளச்சாராய விற்பனையாளா் சுரேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, சஞ்சய்குமாரிடமிருந்து 120 லிட்டா் கள்ளச்சாராயத்தையும், இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய சுரேஷை தேடி வருகின்றனா்.