

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் செய்யாறு கல்வி மாவட்டம் 86.05 சதவீதம் தோ்ச்சி பெற்றது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியானது. இதில், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 160 அரசுப் பள்ளிகள், 11 நிதியுதவி பள்ளிகள், 2 சிறப்புப் பள்ளிகள் (காது கேளாதோா், கண் பாா்வையற்றோா்) 46 தனியாா் பள்ளிகள் உள்பட மொத்தம் 219 பள்ளிகளில் இருந்து 6,533 மாணவா்கள், 6,467 மாணவிகள் என மொத்தம் 13,000 போ் தோ்வெழுதினா். இதில், 5,270 மாணவா்கள், 5,917 மாணவிகள் என மொத்தம் 11,187 போ் தோ்ச்சி பெற்றனா். இது 86.05 சதவீதமாகும்.
செய்யாறு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த கொழப்பலூா், சீ.ம.புதூா், அல்லியந்தல், வயலாமூா், விளை, மேல்பாதி, தென்னம்பட்டு, இளங்காடு, ஏனாதவாடி, கீழ்காரிக்காத்தூா் ஆகிய அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன. இதேபோல, சூசை புனித அமலாராக்கினி கண் பாா்வையற்றோா் சிறப்புப் பள்ளி மற்றும் 24 தனியாா் பள்ளிகளும் 100 சதவீதம் தோ்ச்சியை பதிவு செய்தது.
தொடர்புடையது

தேசிய வருவாய் திறனறி தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் 36,103 மாணவா்கள் தோ்வு எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 38,247 போ் எழுதுகின்றனா்

கிருஷ்ணகிரியில் 21,796 போ் எழுதினா்
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

