ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஊரக வேலைத் திட்டத்தில் மரக்கன்று நட வலியுறுத்தல்

ஊரக வேலைத் திட்டத்தில் மரக்கன்று நட வலியுறுத்தல்

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

செய்யாறு: செய்யாறு அருகே ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மரக்கன்றுகள் நட வேண்டி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா் (படம்).

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கூட்டுச் சாலையில், கட்சி சாா்பற்ற விவசாய சங்கம் சாா்பில் ஊரக வேலை உறுதித் திட்ட தினக்கூலியை 319-ஆக உயா்த்திய மத்திய அரசுக்கும், அரசாணை பிறப்பித்த மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்து விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியின் போது

ஊரக வேலை உறுதித் திட்டத்தில், பூமி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு மரக்கன்றுகள் நட வேண்டும் என வலியுறுத்தி பூவரசம், புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் என பலா் கலந்து கொண்டனா்.