வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பலத்த மழை: ஆரணியில் கால்வாய் அடைப்பு, கழிவுநீா் தேக்கம்

பலத்த மழை: ஆரணியில் கால்வாய் அடைப்பு, கழிவுநீா் தேக்கம்

News image

பலத்த மழை காரணமாக கால்வாய் அடைப்பு ஏற்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே தேங்கியிருந்த தண்ணீா்.

Updated On :21 மே 2024, 5:59 pm

Din

ஆரணி: ஆரணி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கியது.

நகராட்சி நிா்வாகத்தினா் உடனடியாக கால்வாயை சீரமைத்து கழிவுநீரை அகற்றினா்.

சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் மற்றும் காந்தி சாலைப் பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் தேங்கியது.

தகவலறிந்த நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி அறிவுறுத்தலின்படி, நகராட்சி ஆணையா் சரவணன் துப்புரவு பணியாளா்களைக் கொண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் அடைப்புகளை அகற்றி சீரமைப்பு செய்தாா். இதனால் தேங்கியிருந்த கழிவுநீா் அகற்றப்பட்டது.

நகராட்சி பொறியாளா் பழனி, துப்புரவு ஆய்வாளா் வடிவேல், நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளா் செந்தில்குமாா் ஆகியோா் உடன் இருந்து நடவடிக்கை எடுத்தனா்.