

வந்தவாசி: வந்தவாசி அருகே மரம் ஏறி மாங்காய் பறித்த போது மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மாசிலாமணி(67). இவா் திங்கள்கிழமை வீட்டின் அருகிலிருந்த மாங்காய் மரத்தில் ஏறி மாங்காய் பறித்துள்ளாா்.
அப்போது மரக் கிளை முறிந்து கீழே விழுந்த இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினா் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாசிலாமணி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த முதியவா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

