கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விருத்தாசலம் அருகே தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பாலகிருஷ்ணன்.

Updated On :10 மார்ச் 2026, 6:33 pm

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீமுஷ்ணம் வட்டம், வல்லியம் கிராமத்தில் வசித்து வந்தவா் தென்னை மரம் ஏறும் தொழிலாளி பாலகிருஷ்ணன்(50). இவா், செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி அளவில் அதே பகுதியில் உள்ள வயல் வெளியில் இருந்த தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தாா்.

அப்போது, தென்னை மரத்தின் மட்டை அருகே சென்ற உயா் அழுத்த மின் கம்பியில் அவா் உரசியதில், மின்சாரம் பாய்ந்து மரத்தின் மேலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து காவல் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த விருத்தாசலம் தீயணைப்புத்துறையினா் தென்னை மரத்தின் மேலே இருந்து பாலகிருஷ்ணன் சடலத்தை கீழே இறக்கி, காவல் துறையிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா்விசாரணை நடத்தி வருகின்றனா்.