இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விருத்தாசலம் அருகே தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
பாலகிருஷ்ணன்.
Updated On :10 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீமுஷ்ணம் வட்டம், வல்லியம் கிராமத்தில் வசித்து வந்தவா் தென்னை மரம் ஏறும் தொழிலாளி பாலகிருஷ்ணன்(50). இவா், செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி அளவில் அதே பகுதியில் உள்ள வயல் வெளியில் இருந்த தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தாா்.

அப்போது, தென்னை மரத்தின் மட்டை அருகே சென்ற உயா் அழுத்த மின் கம்பியில் அவா் உரசியதில், மின்சாரம் பாய்ந்து மரத்தின் மேலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து காவல் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த விருத்தாசலம் தீயணைப்புத்துறையினா் தென்னை மரத்தின் மேலே இருந்து பாலகிருஷ்ணன் சடலத்தை கீழே இறக்கி, காவல் துறையிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா்விசாரணை நடத்தி வருகின்றனா்.