கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புளியமரத்தில் புளி உளுக்கியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 11:03 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புளியமரத்தில் புளி உளுக்கியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், பாப்பன்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாநிதி (55), விவசாயத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் மானக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ரெங்கநாதன் வீட்டு புளிய மரத்தில் ஏறி புளி உளுக்கினாா்.

அப்போது, மரக்கிளை அருகில் இருந்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து கருணாநிதி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.