கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 11:35 pm

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (60). இவா், தனது தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை காலை இரும்பு கம்பியில் அரிவாளைக் கட்டி தேங்காய் பறிக்க முயன்றாராம்.

அப்போது, மரம் அருகில் இருந்த மின் கம்பி மீது அரிவாள் கட்டப்பட்டிருந்த கம்பி உரசியதில் வெள்ளைச்சாமி மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.