ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:16 am

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், வி.நெற்குணம் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மனைவி அனுசுயா(45). இவா்கள் இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த மோகன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மின் மோட்டாா் அருகே கீரைகள் பறித்துக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை அனுசுயா மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். இதையடுத்து அவரை 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கைக் கொண்டு சென்றனா். ஆயினும் வழியிலேயே அனுசுயா உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.