காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

வந்தவாசியில் பெண் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பெண் ஒருவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :2 நவம்பர் 2024, 10:04 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பெண் ஒருவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வந்தவாசி சந்நிதி புதுத் தெரு விரிவு பகுதியைச் சோ்ந்தவா் ஷேக். இவரது மனைவி அம்ரின்நிஷா(29). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த அக்.26-ஆம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையடைந்த அம்ரின்நிஷா தன்மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்ரின்நிஷா வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அம்ரின்நிஷாவின் தந்தை ஆஜா அளித்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.