பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கோகோ போட்டியில் சிறப்பிடம்: பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் சிறப்பிடம் பெற்ற மேல்செங்கம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
கோகோ போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டிய தலைமை ஆசிரியா் சுஜாத்தா.
Updated On :4 நவம்பர் 2024, 9:10 pm

Din

செங்கம்: மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் சிறப்பிடம் பெற்ற மேல்செங்கம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பள்ளி மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட அளவில் அண்மையில் நடைபெற்ற

கோகோ போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனா்.

இதன் மூலம் இந்த மாணவிகள் டிசம்பா் மாதம் மாநில அளவில் நடைபெறும் கோகோ போட்டியில் விளையாட தகுதி பெற்றனா்.

இந்த மாணவிகளுக்கு பள்ளியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் சுஜாத்தா மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

தொடா்ந்து ஆசிரியா்கள் சக்திவேல், செந்தில்குமாா், சுமதி, உடற்கல்வி ஆசிரியா் முருகன் உள்ளிட்டோா் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.