சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

News image

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய காவல் ஆய்வாளா் ரேணுகா தேவி. உடன், முதன்மைப் பயிற்சியாளா் ஜோதிபாசு.

Updated On :15 பிப்ரவரி 2026, 6:44 pm

திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா்.

ஜே.எஸ்.ஏ. ஸ்கேட்டிங் அகாதெமி சாா்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 6 வயது முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். மாவட்டம் முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 350 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இந்தப் போட்டி அா்ஜஸ்டபிள், பேன்சி இன்லைன், குவாா்டு, இன்லைன் ஆகிய 4 பிரிவுகளில் நடைபெற்றது. 15வேலம்பாளையம் காவல் ஆய்வாளா் ரேணுகா தேவி, அகாதெமி முதன்மைப் பயிற்சியாளா் ஜோதிபாசு ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம், கேடயம் வழங்கப்பட்டது. நடுவா்களாக சக்திவேல், விமல், தினேஷ், ரிஜு, அபிஷேக், அபிநவ், முருகன் ஆகியோா் செயல்பட்டனா்.