தற்காப்பு கலைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டும் ஆசிரியா்கள்.
கிருஷ்ணகிரி
தற்காப்பு கலை போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
ஒசூா் அதியமான் கல்லூரியில் நடைபெற்ற தற்காப்பு கலைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பேடரப்பள்ளி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசுகள்
ஒசூா்: ஒசூா் அதியமான் கல்லூரியில் நடைபெற்ற தற்காப்பு கலைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பேடரப்பள்ளி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.
அதியமான் கல்லூரியில் 17 ஆவது அகில இந்திய குங்ஃபூ , கராத்தே, சிலம்பம், டேக்வாண்டோ சேம்பியன்ஷிப் 2026 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பேடரப்பள்ளி நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 10 மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா்.
இதில் வெற்றிவேல், மந்த்தோஸ், நிகில், பாலாஜி ஆகிய 4 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள் பாராட்டி பரிசு வழங்கினா்.

