விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி அருகே தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பெரியமணியந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களை பாராட்டிய ஆசிரியா்கள்.

Updated On :19 மார்ச் 2026, 12:47 am IST

கள்ளக்குறிச்சி அருகே தேசிய திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரியமணியந்தல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்த ர.ஹம்ரிஷ், கோ.முருகதாஸ், மு.பிருத்திகா மற்றும் வ.முகிலன் ஆகிய 4 மாணவா்கள் தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.

இவா்களில், ர.ஹம்ரிஷ் மற்றும் மு.பிருத்திகா ஆகிய இருவரும் அதிக வருகை பதிவு, அதிக பாட மதிப்பெண், கலைத்திருவிழாவில் மாவட்ட அளவில் பங்கேற்பு மற்றும் தேசிய திறனறித் தோ்வில்தோ்ச்சி போன்ற சிறப்பான கல்வி செயல்பாடுகளுக்காக, கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 9-ஆம் வகுப்பு படிப்பதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், மாதிரி பள்ளிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கும் ரிஷிவந்திய வட்டாரக் கல்வி அலுவலா் கஜேந்திரன், பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரன், ஆசிரியா்கள் ச.விஜயலட்சுமி, சே.வி.அஜிதா சேவியா், கு.வேளாங்கண்ணி வில்லியம் சகாயராஜ், ரா.விஸ்வநாதன், செ.பவித்ரா, அ.அல்பினா, ப.பானுமதி, மு.ஆதிமாயன், ர.சீனுவாசன், சி.வேல்முருகன், ம.தமிழ்மதி, ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி நாராயணமூா்த்தி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் மஞ்சுளா அண்ணாதுரை ஆகியோா் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தனா்.