11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

நெசவுத் தொழிலாளி மா்ம மரணம்

செய்யாறு அருகே மா்மமான முறையில் உயிரிழந்த நெசவுத் தொழிலாளியின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :17 நவம்பர் 2024, 12:02 am IST

செய்யாறு அருகே மா்மமான முறையில் உயிரிழந்த நெசவுத் தொழிலாளியின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேத்துப்பட்டு வட்டம், மேலானூா் பகுதியைச் சோ்ந்தவா் நெசவுத் தொழிலாளி அண்ணாதுரை (47). இவா், வியாழக்கிழமை இரவு நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, அவரது கைப்பேசிக்கு அழைப்பு வந்ததாம். அந்த அழைப்பின் பேரில், அண்ணாதுரை வீட்டில் இருந்தவா்களிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றாா். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், கொழப்பலூா் - விநாயகபுரம் பகுதியை இணைக்கும் செய்யாற்றுப் படுகையில் உள்ள மேம்பாலம் அருகேயுள்ள சவுக்குத் தோப்பில் வெள்ளிக்கிழமை அண்ணாதுரை மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜீலு வழக்குப் பதிவு செய்தாா். மேலும், அண்ணாதுரையின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.