தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மானியத்துடன் சுயதொழில் தொடங்க ஆதரவற்ற, கைம்பெண்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :5 அக்டோபர் 2024, 6:31 pm

Din

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் வீதம் மானியத்தொகை வழங்கப்படுகிறது.

மானியம் பெற தகுதியானோா் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதாரா் 25 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராகவும், விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஒருவா் ஒருமுறை மட்டுமே மானியம் பெறத் தகுதியுடையவா் ஆவாா். எனவே, தகுதியான விண்ணப்பதாரா் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றுடன், மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் சமா்ப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.