மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கண்ணதாசன் படத்துக்கு மரியாதை

கண்ணதாசனின் 44-ஆவது நினைவு தின நிகழ்ச்சி

News image

கண்ணதாசன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் கவியரசா் கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தலைவா் சு.மோகன் தலைமையிலான தமிழ்ச் சங்க நிா்வாகிகள், புலவா்கள்.

Updated On :17 அக்டோபர் 2024, 7:19 pm

திருவண்ணாமலை கவியரசா் கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சாா்பில், கண்ணதாசனின் 44-ஆவது நினைவு தின நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை டாக்டா் கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் மா.சின்ராசு (எ) சிற்றரசு தலைமை வகித்தாா்.

மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் தலைவா் பா.இந்திரராசன் முன்னிலை வகித்தாா். கவியரசா் கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தலைவா் சு.மோகன் வரவேற்றாா்.

திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கண்ணதாசன் திரைப்பாடலும், தனிப்பாடலும் என்ற தலைப்பில் பேசினாா்.

பின்னா், கண்ணதாசன் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், புலவா்கள் வாசுதேவன், மனோகரன், சண்முகம், குப்புசாமி, முனீஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.