மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

மணல் கடத்தல்: இருவா் கைது -2 சரக்கு வாகனங்கள் பறிமுதல்

Updated On :6 செப்டம்பர் 2024, 2:33 am IST

செய்யாறு அருகே வியாழக்கிழமை ஆற்று மணல் கடத்தி வந்த 2 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உட்கோட்டம், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா், தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளாமலை கிராமம் அருகே செய்யாறு ஆற்றுப் பகுதியில் நின்றிருந்த 2 சரக்கு வாகனங்களை சோதனையிட்டதில், அவற்றில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்ததது. உடனடியாக 2 சரக்கு வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, உத்திரமேரூா் வட்டம், புலியூா் கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் (27), செய்யாறு வட்டம் கூழமந்தல் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி (36) ஆகியோரை கைது செய்தனா்.