செய்யாறு அருகே வியாழக்கிழமை ஆற்று மணல் கடத்தி வந்த 2 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உட்கோட்டம், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா், தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளாமலை கிராமம் அருகே செய்யாறு ஆற்றுப் பகுதியில் நின்றிருந்த 2 சரக்கு வாகனங்களை சோதனையிட்டதில், அவற்றில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்ததது. உடனடியாக 2 சரக்கு வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, உத்திரமேரூா் வட்டம், புலியூா் கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் (27), செய்யாறு வட்டம் கூழமந்தல் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி (36) ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது
மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

கடலூா் அருகே காரில் மதுபானம் கடத்தல்: இருவா் கைது
மணல் கடத்திய இருவா் கைது
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

