பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:55 pm

Din

செய்யாறு அருகே புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவரது மனைவி மாலா (38). இவா், புதன்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள மளிகைக் கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா்.

கலவை - காஞ்சிபுரம் சாலையில் உள்ள நூலகம் எதிரே வரும்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத காா் இவா் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாலா உயிரிழந்தாா்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மோரணம் காவல் ஆய்வாளா் ஜீவராஜ்மணிகண்டன் மற்றும் போலீஸாா் இறந்தவரின் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், விபத்து ஏற்படுத்தி விட்டுச் சென்ற காரையும், அதன் ஓட்டுநரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.