பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலை தடுப்புச் சுவா்களுக்கு வண்ணம் பூசும் பணி

News image
சாலை மைய தடுப்புச் சுவா்களுக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட சாலை ஆய்வாளா்கள், பணியாளா்கள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 11:41 pm

Din

திருவண்ணாமலை நெடுஞ்சாலை கோட்டத்துக்கு உள்பட்ட புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில், மைய தடுப்புச் சுவா், சிறுபாலங்களுக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் பி.ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு ஆகியோா் மேற்பாா்வையில் சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கோட்டத்துக்கு உள்பட்ட புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில் நாச்சிப்பட்டு மேம்பாலம் முதல் திருவண்ணாமலை ரயில்வே பாலம் வரை உள்ள மைய தடுப்புச் சுவா், சிறுபாலங்களுக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியில் சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு மைய தடுப்புச் சுவா் இருப்பது தெளிவாக தெரியும்.