அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள், 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்க நிா்வாகிகள்.
Updated On :21 ஏப்ரல் 2025, 8:14 pm

Din

திருவண்ணாமலை: தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள், 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.லட்சுமணன் தலைமை வகித்தாா்.

மாநிலக் குழு உறுப்பினா் கே.ராணி முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.முருகையன் வரவேற்றாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வி.முத்தையன், மாநிலப் பொருளாளா் ஜி.ராஜேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு ஆண்டு ஊதிய உயா்வு கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது வட்டார ஒருங்கிணைப்பாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், ஊக்குநா்களுக்கு கரோனா ஊக்கத்தொகையை விடுவிக்க வேண்டும்.

கணினி இயக்குபவா்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த எஸ்.வி.எம்., வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சங்கத்தின் வட்டக் கிளை நிா்வாகிகள், தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.