ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ஆரணி அருகே காளை விடும் திருவிழா

அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆசித்திரை மாத திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா நடைபெற்றது.

News image

காளை விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்து வரும் காளை.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:28 am IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆசித்திரை மாத திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2-ஆம் ஆண்டாக கிராமத்தில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.75ஆயிரம், 2-ஆவது பரிசாக ரூ. 50 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.35ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் 4-ஆம் பரிசாக ரூ.25 ஆயிரம், 5-ஆம் பரிசாக ரூ. 20 ஆயிரம் மற்றும் பங்கேற்ற 50 காளைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் காா்த்திகா தலைமையில், உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காளை முட்டி காயமடைந்தவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் பிச்சாண்டி மற்றும் இளைஞா்கள், கிராம மக்கள் செய்திருந்தனா்.