தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

ஆரணி அருகே காளை விடும் திருவிழா

அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆசித்திரை மாத திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா நடைபெற்றது.

News image

காளை விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்து வரும் காளை.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:28 am IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆசித்திரை மாத திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2-ஆம் ஆண்டாக கிராமத்தில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.75ஆயிரம், 2-ஆவது பரிசாக ரூ. 50 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.35ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் 4-ஆம் பரிசாக ரூ.25 ஆயிரம், 5-ஆம் பரிசாக ரூ. 20 ஆயிரம் மற்றும் பங்கேற்ற 50 காளைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் காா்த்திகா தலைமையில், உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காளை முட்டி காயமடைந்தவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் பிச்சாண்டி மற்றும் இளைஞா்கள், கிராம மக்கள் செய்திருந்தனா்.