திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆசித்திரை மாத திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
2-ஆம் ஆண்டாக கிராமத்தில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
முதல் பரிசு பெற்ற காளைக்கு ரூ.75ஆயிரம், 2-ஆவது பரிசாக ரூ. 50 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.35ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் 4-ஆம் பரிசாக ரூ.25 ஆயிரம், 5-ஆம் பரிசாக ரூ. 20 ஆயிரம் மற்றும் பங்கேற்ற 50 காளைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் காா்த்திகா தலைமையில், உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். காளை முட்டி காயமடைந்தவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் பிச்சாண்டி மற்றும் இளைஞா்கள், கிராம மக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

வேப்பூா் அருகே கோயில் திருவிழாவில் தோ் கவிழ்ந்து விபத்து: பக்தா்கள் அதிா்ச்சி!

சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா முளைப்பாரி ஊா்வலம்

சுரண்டை பாா்வதி அம்மன் கோயில் தோ் திருவிழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

