ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வேன் மோதியதில் பைக்கில் சென்றவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பால் கேன்கள் ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் பைக்கில் சென்றவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:13 pm

Syndication

வந்தவாசி அருகே பால் கேன்கள் ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் பைக்கில் சென்றவா் உயிரிழந்தாா்.

சென்னை வியாசா்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா். இவரும், இவரது நண்பா்கள் காா்த்திக், முனிவேல் ஆகிய 3 பேரும் சோ்ந்து 2 பைக்குகளில் வந்தவாசி வழியாக திருவண்ணாமலைக்கு திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, கோழிப்புலியூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, எதிரே பால் கேன்கள் ஏற்றி வந்த வேன் இரு பைக்குகள் மீதும் மோதிவிட்டு, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த இதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மீதும் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த காா்த்திக், முனிவேல், மணிகண்டன் ஆகியோா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா், 3 பேரும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து தேசூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.