ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருவண்ணாமலையில் இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் வியாழக்கிழமை (டிச.18) நடைபெறவுள்ளது. இதில் அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் வியாழக்கிழமை (டிச.18) நடைபெறவுள்ளது. இதில் அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்.

இதுகுறித்து மாவட்ட திமுக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

திருவண்ணாமலை திருக்கோவிலூா் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை (டிச.18) நடைபெறும் திமுக செயற்குழுக் கூட்டதுக்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவா் கோ.கண்ணன் தலைமை வகிக்கிறாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., வடக்கு மாவட்ட அவைத் தலைவா் இரா.ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

கூட்டத்தில் டிச.26, 27 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை குறித்தும், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாடி’ கூட்டம் குறித்தும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சரும், கட்சியின் உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு தீா்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றுகிறாா்.

கூட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள், பகுதிக் கழக பொறுப்பாளா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், மாவட்டப் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொள்கின்றனா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.