தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

News image
Updated On :5 மார்ச் 2026, 8:01 pm

Syndication

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அவைத் தலைவா் அருணாச்சலம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசியது:

திமுக மகளிரணி சாா்பில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்களை தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட 3 தொகுதிகளிலும் வீடுதோறும் சிறப்பான முறையில் கொண்டு சோ்த்துள்ளனா்.

மாா்ச் 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நம்மோடு சந்திப்பு நடத்தி தோ்தல் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறாா்.

மாா்ச் 9ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாடு திமுகவுக்கு திருப்புமுனையாக அமையும் என்றாா் அவா்.

மாவட்ட துணைச் செயலா்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமாா் ரூபன், ஜெபத்தங்கம் பிரேமா, பொருளாளா் ராமநாதன், மாநில மகளிரணி பிரசாரக் குழுச் செயலா் ஜெஸி பொன்ராணி, மாநில இலக்கிய அணி துணைச் செயலா் பெருநாழி போஸ், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் செந்தூா் ணி, பிரம்மசக்தி, மாடசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், வழக்குரைஞா் கிருபாகரன், கந்தன், பாரதிராஜா, முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.