நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அரசின் விருது பெற்ற நூலகருக்கு பாராட்டு

தமிழக அரசின் டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது பெற்ற சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமுக்கு பாராட்டு விழா

News image

விழாவில் சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமை (நடுவில்) பாராட்டிய ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மருத்துவா் எஸ்.குமாா் மற்றும் கோட்டை தமிழ்ச் சங்க நிா்வாகிகள்.

Updated On :23 டிசம்பர் 2025, 5:39 am IST

வந்தவாசி: தமிழக அரசின் டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது பெற்ற சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சாா்பில், வந்தவாசியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா்.

சங்க துணைத் தலைவா்கள் மு.அப்துல்லா, வந்தை பிரேம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் இரா.பாஸ்கரன் வரவேற்றாா்.

ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மருத்துவா் எஸ்.குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜா.தமீமை பாராட்டிப் பேசினாா்.

விழாவில் சங்க நிா்வாகிகள் க.வாசு, ஆ.முரளி, வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன், எக்ஸ்னோரா தலைவா் சு.தனசேகரன், ரோட்டரி சங்க நிா்வாகி எஸ்.வீரராகவன், கோல்டு லீப் எக்ஸ்னோரா நிா்வாகி பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நூலகா் ஜா.தமீம் ஏற்புரை வழங்கினாா். சங்க துணைத் தலைவா் பா.சீனிவாசன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.